அம்மா
காடு,மேடு
சுற்றித்திரிந்தேன்
தவம் புரிந்தேன்!
வந்தார் கடவுள்
என்ன வேண்டும் என்றார்!
நீர் எப்போதும் என்னுடன்
வேண்டும் என்றேன்
ஆகட்டும் என்று மறைந்தார்!
எழுப்பு மணி ஒலித்தது!
விழித்து கொண்டேன்
கையில் காப்பி குவளையுடன்
அம்மா!..
நினைத்து கொண்டேன்
எப்போதும் என்னுடன்
கடவுள்
அம்மாவாக!..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக